Sunday, October 3, 2010

அடுத்து என்ன?...

கணித்ததுப்போல எத்திதிசைகளில்லும் அடித்து நொறுக்கிக்கொண்டு இருக்கிறான் எங்கள் எந்திரன்...

அடுத்து என்ன?...பெரிய கேள்வி..விடையும் பெரிதாக இருக்கக் கூடும் என்பது திரையுலகின் வட்டாரங்கள்..

தகவல்ப் படி மூன்று செய்திகள் சாத்தியமாக வாய்ப்புக்கள் பிரகாசமாகவே உள்ளது..

செய்தி ஒன்று:
பாட்ஷா 2


தலைவரின் திரை உலக சரித்திரத்தில் உச்சம் என்றால் பாட்ஷா தான்.. பாட்ஷா அவருடைய திரை வாழ்கையில் மட்டுமல்ல தமிழக அரசியலை புரட்டிப்போட்ட திரைப்படம் என்று வரலாறே சொல்லும். சமிபத்தில் தலைவரே சத்யா மூவீஸ்சுக்கு படம் பண்ணுவதில் ஆர்வம் காட்டியதும் நினைவிருகலாம். படத்தின் கதை விவாதத்தில் தலைவரே பங்குகொண்டதாக ரகசிய செய்திகள்.. இதைதான் வைரமுத்து எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தலைவர் என்திரனில் 100 அடி பாய்ந்த தலைவர்...அடுத்து 200 அடி பாயபோவதாக சொன்னதோ ??

செய்தி இரண்டு:


தலைவரின் திரையுலகின் காட்பாதர் அமிதாப் பச்சன் தயாரிப்பில் , ஹிந்தி படங்களான சீனி கம் மற்றும் பா படத்தின் இயக்குனர் பால்கி இயக்கத்தில் , நீண்ட இடைவேளைக்கு பிறகு இசைஞானி இளையராஜா இசையில், அமிதாப் பச்சன் அவர்களுடனும், ஸ்ரீதேவியுடனும் நடிக்க இருப்பதாக இரண்டாவது செய்தி.

செய்தி மூன்று:


தமிழ்த் திரை வரலாற்றின் முக்கிய செய்தியாக

விளங்கிய தலைவரின் ஆருயிர் நண்பர் பத்மஸ்ரீ கமல்ஹசனின் லட்சிய படைப்பான மருதநாயகம். இந்த படம் எந்திரனுக்கு பிறகு இந்தியாவிலயே அதிக பொருதச் செலவில் எடுக்கப்படப்போகும் படமாக இருக்கும். இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினும், கமல்ஹாசன் அவர்களும் சேர்ந்தே தாயரிக்கிறார்கள் . படத்தில் தலைவர் சூப்பர்ஸ்டார் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் மருதநாயகத்தின் நண்பராக வரும் சேதுபதி ஜாமீன் கதாபாத்திரம்..கடைசி 20 நிமிடம் நண்பர்களை தமிழ் திரையுலகம் மீண்டும் பார்க்கலாம்.

மீடியாக்களில் கசிந்து வரும் செய்திகள் தான்..விடைகளை தலைவர் தான் உறுதி செய்ய வேண்டும்! அது உங்களுக்கும் தெரிந்ததே!



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails